“விஜயால் தான் என் இசைப்பயணம் துவங்கியது”… இமான் தேசிய விருது வென்றது குறித்து அஜித், விஜய் என்ன சொன்னார்கள் தெரியுமா!?

“விஜயால் தான் என் இசைப்பயணம் துவங்கியது”… இமான் தேசிய விருது வென்றது குறித்து அஜித், விஜய் என்ன சொன்னார்கள் தெரியுமா!?

இசையமைப்பாளர் இமான் தான் தேசிய விருது வென்றதை அடுத்து ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் வாழ்த்து கூறியது பற்றி தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘விஸ்வாசம்’ படத்திற்காக டி இமானுக்கு கிடைத்துள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“விஜயால் தான் என் இசைப்பயணம் துவங்கியது”… இமான் தேசிய விருது வென்றது குறித்து அஜித், விஜய் என்ன சொன்னார்கள் தெரியுமா!?

கடந்த 2011-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான். இதுவரை 100 படங்களுக்கும் மேல் அவர் இசையமைத்திருக்கிறார். இமான் பெறும் முதல் தேசிய விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேசிய விருதால் இமான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது அஜித், விஜய் மற்றும் ரஜினிகாந்த் தேசிய விருது வென்றது குறித்து என்ன சொன்னார்கள் என்பதைப் பகிர்ந்துள்ளார்.

“நம் அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு போன் செய்து விருது வென்றதற்காக வாழ்த்துக்கள் கூறியதில் மிக்க மகிழ்ச்சி. நம்முடைய விஜய் அண்ணன் மற்றும் அஜித் சார் இருவரும் எனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதை அடுத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விஜய் அன்னனுக்காக தமிழன் படத்திற்கு இசையமைத்தது மூலமாகத் தான் எனது இசைப் பயணம் தொடங்கியது. விஸ்வாசம் படத்திற்கான அங்கீகாரம் கிடைத்ததை அவரே வாழ்த்தும் போது சிறப்பாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

Share this story