‘இந்தியன் 2’ பட விவகாரம் இருதரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கமல்!

‘இந்தியன் 2’ பட விவகாரம் இருதரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கமல்!

‘இந்தியன் 2’ பட விவகாரத்தில் இருதரப்பினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் நடிகர் கமல் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்தியன் 2’ பட விவகாரம் இருதரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கமல்!

நடிகர் கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்தது ‘இந்தியன் 2’. 70 சதவீத பணிகள் முடித்தபோது, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரானா பிரச்சனை, கமல் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்து வருகிறது.

‘இந்தியன் 2’ பட விவகாரம் இருதரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கமல்!

பொறுத்து, பொறுத்து பார்த்த ஷங்கர், அடுத்த படத்தின் பணிகளை துவங்கிவிட்டார். தமிழில் மீண்டும் படம் இயக்கினால் பிரச்சனை ஏற்படும் கருதி, தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்க துவங்கியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என லைக்கா வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பும் பேசி பேசி பிரச்சினையை முடித்துக்கொள்ள அறிவுறுத்தியது.

‘இந்தியன் 2’ பட விவகாரம் இருதரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கமல்!

இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தை ஜூலை மாதம் முடித்து கொடுப்பதாக ஷங்கர் கூறியும், லைக்கா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சனையில் சுமூக தீர்வுகாண கமல் முயற்சிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருதரப்பினரையும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். கமல் இந்த பிரச்சனையில் தலையிடுவதால் விரைவில் சுமூக தீர்வு ஏற்பட்டு, விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story