சக்திவாய்ந்த, நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்… கர்ணன் படத்தைப் புகழ்ந்த ஐபிஎஸ் அதிகாரி!

சக்திவாய்ந்த, நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்… கர்ணன் படத்தைப் புகழ்ந்த ஐபிஎஸ் அதிகாரி!

ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், கர்ணன் படத்தைப் பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சக்திவாய்ந்த, நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்… கர்ணன் படத்தைப் புகழ்ந்த ஐபிஎஸ் அதிகாரி!

மாரி செல்வராஜ் வழக்கம் போல, இந்தப் படத்திலும் அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக வாள் தூக்கியுள்ளார். கர்ணன் படத்தில், காவல்துறையினரின் அதிகார ஒடுக்குமுறையை காட்சிப்படுத்தியிருந்ததால், காவல்துறை பற்றி தவறாகச் சித்தரித்தாகக் கூறப்பட்ட நிலையில், காவல்துறையின் உயர்ந்த அதிகாரி ஒருவர் படத்தைப் பாராட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கர்ணன் அநியாயம் மற்றும் அநீதியை எதிர்த்துப் போராடுகிறான்.
பார்வையாளர்களை மனதில் அந்த உணர்வை பிரதிபலிக்கச் செய்திருக்கிறது. கர்ணன் சக்திவாய்ந்த படம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்.”| என்று ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பாராட்டுப் பதிவு வைரலாகி வருகிறது.

Share this story