யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் யுத்தம்… வெளியானது காடன் படத்தின் ட்ரைலர்!

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் யுத்தம்… வெளியானது காடன் படத்தின் ட்ரைலர்!

சர்வதேச வனவிலங்கு வாழ்க்கை தினத்தை முன்னிட்டு காடன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் ‘காடன்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜோயா ஹுசைன், ஷ்ரேயா பில்கோன்கர் இரு நடிகைகள் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் யுத்தம்… வெளியானது காடன் படத்தின் ட்ரைலர்!

இப்படம் தெலுங்கில் ‘ஆரண்யா‘ என்ற பெயரில் வெளியிடப்பட இருக்கிறது. ஹிந்தியில் ‘ஹாதி மேரா சாதி’ என்ற பெயரில் வெளியாகிறது.

இன்று வனவிலங்குகள் வாழ்க்கை தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுவதை அடுத்து காடன் படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரைலரில் பல யானைகளுடன் பிரம்மாண்டமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. யானைகளின் வழித்தடத்தை அழித்து மனிதர்கள் கட்டடங்கள் கட்டுவது, அதை எதிர்த்து போராடும் ஹீரோ என உண்மை சம்பவங்களையும் படம் அடிப்படையாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் யுத்தம்… வெளியானது காடன் படத்தின் ட்ரைலர்!

மார்ச் 26-ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

Share this story