இந்த மாத கடைசியில் காத்து வாக்குல ரெண்டு காதலா ?

இந்த மாத கடைசியில் காத்து வாக்குல ரெண்டு காதலா ?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்பட வெளியீட்டுக்கு பிறகு மலையாள படமான நிழல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த மாத கடைசியில் காத்து வாக்குல ரெண்டு காதலா ?

மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வருமானத்தை ஈட்டித் தந்ததால் நயன்தாரா தற்போது தனது சம்பளத்தையும் 10 கோடியாக உயர்த்தி உள்ளார். தற்போது நிழல் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்து இருக்கும் அவர் , அடுத்தபடியாக தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் ”காத்து வாக்குல இரண்டு காதல்” திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.

இந்த மாத கடைசியில் காத்து வாக்குல ரெண்டு காதலா ?

முன்னதாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ”அண்ணாத்த” திரைப்படத்தில் நடிக்கவிருந்த நயன்தாரா தற்போது விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்க உள்ளார்.

இந்த மாத கடைசியில் காத்து வாக்குல ரெண்டு காதலா ?

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டிசம்பர் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this story