”காத்துவாக்குல ரெண்டு காதல்” பட ஷூட்டிங்கில் பரபரப்பு !

”காத்துவாக்குல ரெண்டு காதல்” பட ஷூட்டிங்கில் பரபரப்பு !

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படப்பிடிப்பின்போது நயன்தாராவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

”காத்துவாக்குல ரெண்டு காதல்” பட ஷூட்டிங்கில் பரபரப்பு !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்திருந்தனர். அந்தப்படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்து கலக்கி இருந்தார் நயன்தாரா. இந்த படம் மாபெரும் வெற்றியை தந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் ”காத்துவாக்குல 2 காதல்” என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் கூட்டணியான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தாவும் நடிக்கிறார். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அணிருத் இசை அமைக்கிறார்.

படத்தின் பூஜை நேற்று முடிந்த நிலையில் முதல் நாள் படப்பிடிப்பு தாம்பரம் அருகே இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
காலை முதல் நடைபெற்ற படப்பிடிப்பு மீண்டும் நாளையும் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படப்பிடிப்பின்போது நயன்தாராவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் சூழ்ந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Share this story