‘காத்துவாக்குல ரெண்டு காதல்” படப்பிடிப்பு தொடக்கம் -சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விக்னேஷ் சிவன் !

‘காத்துவாக்குல ரெண்டு காதல்” படப்பிடிப்பு தொடக்கம் -சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விக்னேஷ் சிவன் !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் படப்பிடிப்பில் தன்னை வெறும் டம்மி யாக பயன்படுத்துவதைப்போன்று உணர்த்த சமந்தா படத்தில் இருந்து விலகியதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு நேற்றைய தினம் படத்தின் பூஜையை முடித்துள்ளது. மேலும் இப்படத்தில் இருந்து சமந்தா விலகவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக சமந்தாவின் பெயர் இடம்பெற்றுள்ள படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்” படப்பிடிப்பு தொடக்கம் -சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விக்னேஷ் சிவன் !

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் டிசம்பர் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழு ஏற்கெனெவே தெரிவித்திருந்தது. அதன்படி நேற்றைய தினம் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற படபூஜையில் இயக்குனர் படக்குழுவுடன் ,இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகர் விஜய்சேதுபதி மட்டுமே கலந்துகொண்டனர்.சமந்தாவும் நயன்தாராவும் பங்கேற்கவில்லை.

Share this story