ஐடி ஊழலை பற்றி பேசும் காஜல் அகர்வால்… படத்தின் டைட்டில் வெளியீடு

ஐடி ஊழலை பற்றி பேசும் காஜல் அகர்வால்… படத்தின் டைட்டில் வெளியீடு

காஜல் அகர்வால் நடித்து 5 மொழிகளில் உருவாகும் தெலுங்கு படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

ஐடி ஊழலை பற்றி பேசும் காஜல் அகர்வால்… படத்தின் டைட்டில் வெளியீடு

இந்தியாவின் பலமொழிகளில் பிசியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது ஹேய் சினாமிகா, ஆச்சார்யா, இந்தியன் 2, கோஸ்டி, பாரீஸ் பாரீஸ் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இவருடன் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவும், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர்.

ஐடி ஊழலை பற்றி பேசும் காஜல் அகர்வால்… படத்தின் டைட்டில் வெளியீடு

உலகின் மிகப்பெரிய ஐடி ஊழலை கதையம்சமாக கொண்ட இந்த திரைப்படத்தை ஜெப்ரி ஜி சின் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.

ஐடி ஊழலை பற்றி பேசும் காஜல் அகர்வால்… படத்தின் டைட்டில் வெளியீடு

இந்த படத்தில் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் இன்று அறிவிக்கப்பட்டது. 5மொழியில் உருவாகுவதால் தமிழில் ’அனு அண்ட் அர்ஜுன்’ என்ற டைட்டிலும், மொசகாலு’ என்ற டைட்டிலும் தெலுங்கு மொழிக்கும் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Share this story