கல்யாணத்திற்கு பின்னர் பேயாக மாறும் காஜல்!

கல்யாணத்திற்கு பின்னர் பேயாக மாறும் காஜல்!

நடிகை காஜல் அகர்வால் புதிய ஹாரர் பேண்டஸி படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவைத் திருமணம் செய்தார். அதையடுத்து தற்போது இந்த ஜோடி ஜாலியாக பல இடங்களுக்குச் சென்று ஹனிமூன் ட்ரிப் கொண்டாடி வருகின்றனர்.

கல்யாணத்திற்கு பின்னர் பேயாக மாறும் காஜல்!

திருமணம் ஆனாலும் காஜல் படங்கள் கமிட் ஆவதில் குறை வைக்கவில்லை. அதே போல் கிளாமர் காட்சிகளுக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறாராம்.

காஜல் திருமணத்திற்கு முன்னர் ;இந்தியன் 2; மற்றும் சிரஞ்சீவியின் ;ஆச்சார்யா; படங்களில் நடித்து வந்தார். தற்போது அந்தப் படங்களில் மீண்டும் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ‘கோஸ்டி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஹாரர் பேண்டஸி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கல்யாண் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் ‘ஜாக்பாட்’ மற்றும் பிரபுதேவா நடிப்பில் ‘குலேபகாவலி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இது ஒரு கதாநாயகி சார்ந்த கற்பனை ஹாரர் காமெடி படமாக இருக்கும். காஜல் தனது திருமணத்திற்குப் பிறகு கமிட் ஆகியுள்ள முதல் படம் இதுவாகும் என்று தெரிவிக்கப்டுகிறது.

கல்யாணத்திற்கு பின்னர் பேயாக மாறும் காஜல்!

இந்தப் படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, மற்றும் பல நகைச்சுவை நடிகர்கள் நடிக்க உள்ளனர். முன்னணி நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குலேபகவலியில் படத்திற்கு இசையமைத்த விவேக்-மெர்வின் இரட்டையர் இந்தப் படத்திற்கும் இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளது.

இயக்குனர் டீகே படத்திலும் காஜல் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story