திரையில் மட்டும் வந்தா போதும், ரசிகர்கள் மனச ஜெயிச்சுடலாம்னு ரஜினி நிரூபிச்சுருக்காரு… கமல்ஹாசன் வாழ்த்து!

திரையில் மட்டும் வந்தா போதும், ரசிகர்கள் மனச ஜெயிச்சுடலாம்னு ரஜினி நிரூபிச்சுருக்காரு… கமல்ஹாசன் வாழ்த்து!

நடிகருக்கு ரஜினிகாந்துக்கு மதிப்புமிக்க விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வருடம் தோறும் திரைத்துறையில் அளப்பரிய பங்கீடு மற்றும் சாதனைகள் படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுவதுண்டு. கடந்த வருடம் இந்த விருது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் மட்டும் வந்தா போதும், ரசிகர்கள் மனச ஜெயிச்சுடலாம்னு ரஜினி நிரூபிச்சுருக்காரு… கமல்ஹாசன் வாழ்த்து!

இந்த அறிவிப்பை அடுத்து இந்தியத் திரையுலகினர் அனைவரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் 45 வருடங்களுக்கும் மேல் பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற தகுதியானவர் தான் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரையில் மட்டும் வந்தா போதும், ரசிகர்கள் மனச ஜெயிச்சுடலாம்னு ரஜினி நிரூபிச்சுருக்காரு… கமல்ஹாசன் வாழ்த்து!

தற்போது நடிகர் கமல்ஹாசன் தனது நண்பர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் விருதை அடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story