இரண்டாவது முறையாக அம்மாவான கரீனா கபூர்… குவியும் வாழ்த்துக்கள்!

இரண்டாவது முறையாக அம்மாவான கரீனா கபூர்… குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல பாலிவுட் ஜோடியான கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகர்களான கரீனா கபூர் மற்றும் சயிப் அலி கான் இருவரும் ஒருவரையொருவர் காதலித்துப் பின்னர் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு மகன் தைமூர் அலி கான் என்ற 4 வயது மகன் இருக்கின்றார். அதையடுத்து கரீனா கபூர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்தார்.

இரண்டாவது முறையாக அம்மாவான கரீனா கபூர்… குவியும் வாழ்த்துக்கள்!

இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8:30 மணியளவில் கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், கரீனாவும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த ஜோடிக்கு பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this story