‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு கண்ணாபின்னா திட்டி தீர்க்கும் ரசிகர்கள்… கதறும்‌ பிரபல நடிகர்…

‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு கண்ணாபின்னா திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…  கதறும்‌ பிரபல நடிகர்…

‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் நட்ராஜை வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு கண்ணாபின்னா திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…  கதறும்‌ பிரபல நடிகர்…

ஒரு கிராமத்தை, பிரச்சினையிலிருந்து காப்பாற்றும் சாதாரண இளைஞனின் கதைதான் ‘கர்ணன்’. தனுஷின் வெறித்தனமாக நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் போற்றத்தக்க படமாக இந்த படம் வெளிவந்துள்ளதை யாராலும் மறுக்க இயலாது.தனது இரண்டாவது படத்திலேயே மாரி செல்வராஜ் என்ற இயக்குனர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருக்கிறார்.

‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு கண்ணாபின்னா திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…  கதறும்‌ பிரபல நடிகர்…

கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வணிக ரீதியாக வசூலை வாரி குவித்து வருகிறது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் நடித்துள்ள ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால், கௌரி கிஷன் ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கது. ரசிகர்கள் கர்ணனை கொண்டாடி வரும் அதேநேரத்தில் பிரபலங்களும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் நட்ராஜ் நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் இந்த படத்தில் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் அவரை வாட்டி வதைத்து வருகின்றனர். ஏனென்றால் இந்த படத்தில் தனுஷ்-க்கு எதிராக கொடூரமான போலீசாக நடித்திருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த ரசிகர்கள், அது படம் என்று பாராமல் நிஜத்தில் அவரை திட்டி வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகர் நட்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா.. முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி…” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story