ஷங்கர் படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்!?

ஷங்கர் படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்!?

ஷங்கர் இயக்கவிருக்கும் டோலிவுட் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோலிவுட் ரசிகர்களுக்கு பிரம்மாண்டம் காட்டிய ஷங்கர் தற்போது டோலிவுட் ரசிகர்களுக்கும் பிரம்மாண்டம் காட்டத் தயாராகி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஷங்கர் படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்!?

தற்போது இந்தப் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ளாராம். ஷங்கர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் கதையே கார்த்திக் சுப்புராஜ் எழுதியது தானாம். அந்தக் கதை ஷங்கருக்கு பிடித்துவிட அதை படமாக்க சம்மதித்துள்ளாராம் ஷங்கர்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் அந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளாராம். ஷங்கர் படங்களுக்கு பெரும் பலமாக இருந்தது எழுத்தாளர் சுஜாதா தான். அவர் மறைவுக்குப் பின்னர் ஷங்கர் எடுக்கும் படங்களில் சற்று சறுக்கல் தென்படுவதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் சுஜாதா இடத்தை நிரப்புவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரின் கூட்டணியில் உருவாகும் படம் புதுமையாகவும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவதாய் அமையும் என்றும் கூறப்படுகிறது.

Share this story