காதலர் தினத்தில் ஸ்பெஷல் ட்ரீட்… காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்…

காதலர் தினத்தில் ஸ்பெஷல் ட்ரீட்… காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்…

காதலர் தினத்தில் ‘காத்துல வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அது என்ன என்பது இன்றே வெளியாக உள்ளது.

ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், நடிகை நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர். ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் உடன் இணைந்து லலித்குமார் தயாரிக்கிறார்.

காதலர் தினத்தில் ஸ்பெஷல் ட்ரீட்… காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்…

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூன்று நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

காதலர் தினத்தில் ஸ்பெஷல் ட்ரீட்… காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்…

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கடவுள் அருளால் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், படத்தின் அப்டேட் ஒன்று காதலர் தினத்தன்று வெளியிடவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறியுள்ளார். படத்தின் அப்டேட் என்ன வெளியாகும் என்று தெரியாமல் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Share this story