விரைவில் முடிவுக்கு வருகிறது ‘காற்றின் மொழி’ சீரியல்… வருத்தத்தில் ரசிகர்கள்..

விரைவில் முடிவுக்கு வருகிறது ‘காற்றின் மொழி’ சீரியல்… வருத்தத்தில் ரசிகர்கள்..

காற்றின் மொழி சீரியல் வரும் 9ம் தேதியுடன் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பல கதைக்களை கொண்ட‌ சீரியல்கள் உருவாகி ஒளிபரப்பாகி வருகிறது. கணவன்-மனைவி காதல், மாமியார்-மருமகள் என பல உறவுகளை வைத்து சீரியல் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வரிசையில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ சீரியல் கொஞ்சம் வித்தியாசமானது.

விரைவில் முடிவுக்கு வருகிறது ‘காற்றின் மொழி’ சீரியல்… வருத்தத்தில் ரசிகர்கள்..

2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஒரு வாய் பேசமுடியாத பெண்ணின் உணர்வுகளை தத்ரூபமாக ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியலில் புதிய திருப்பங்கள், காதல், குடும்பம் என எல்லாம் கலந்து கலவையாக இடம்பெற்றிருந்தது.

விரைவில் முடிவுக்கு வருகிறது ‘காற்றின் மொழி’ சீரியல்… வருத்தத்தில் ரசிகர்கள்..

‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து புகழ்பெற்ற சஞ்சீவ் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா என்பவர் வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  சிறிய வயதில் இருந்தே, தனது அப்பாவால் ஒதுக்கப்படும் பெண், எப்படி அப்பாவின் அன்பை அடைகிறார் என்பதுதான் இந்த சீரியலின் மொத்த கதையாக உள்ளது.

விரைவில் முடிவுக்கு வருகிறது ‘காற்றின் மொழி’ சீரியல்… வருத்தத்தில் ரசிகர்கள்..

இந்த நிலையில் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் விரைவில் முடிய உள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 9ம் தேதியுடன் இந்த சீரியல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story