திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவிகிறது – கயல் ஆனந்தி பேட்டி

திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவிகிறது – கயல் ஆனந்தி பேட்டி

திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குவிவதாக நடிகை கயல் ஆனந்தி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆனந்தி. கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான கயல் படத்தில் நடித்தன் மூலம் பெரும் புகழ்பெற்றதால் ‘கயல் ஆனந்தி’ என பெயர் மாற்றம் அடைந்தார்.

திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவிகிறது – கயல் ஆனந்தி பேட்டி

இதைத்தொடர்ந்து விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது ராஜசேகர் துரைசாமி இயக்கிய “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவிகிறது – கயல் ஆனந்தி பேட்டி

இந்நிலையில் கயல் ஆனந்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவர் முழு ஆதரவாக இருப்பதாகவும், நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசை என்று குறிப்பிட்டுள்ளார். திருமணமானால் திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகுதான் நிறைய படங்கள் நடிக்க இருக்கிறேன். பெற்றோரை விட ஒரு பெண் மேல் அன்பு செலுத்துவது யாராகவும் இருக்க முடியாது என்று கூறினார்.

Share this story