அம்மா கையால் மருதாணி வைத்துக் கொள்ளும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!

அம்மா கையால் மருதாணி வைத்துக் கொள்ளும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் லாக்டவுன் தனது அம்மாவின் கையினால் மருதாணி வைத்துக்கொண்ட த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக முன்னேறியுள்ளார். பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததும் கவர்ச்சியில் இறங்கும் மற்ற நடிகைகளைப் போல் அல்லாமல் எப்போதும் ஆடை விஷயத்தில் கவனமாக இருந்து வருகிறார். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அவர் கொண்டாடப்படுகிறார். மகாநதி படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

அம்மா கையால் மருதாணி வைத்துக் கொள்ளும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!

தற்போது கீர்த்தி லாக்டவுன் நேரத்தில் தனது அம்மா மேனகாவின் கைகளினால் மருதாணி வைத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் “அன்பு அதன் தூய்மையான வடிவத்தில்” என்று தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் 80-களில் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு உடன் ‘சர்க்காரு வாரி பாட்டா‘ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன் உடன் ‘சாணிக் காயிதம்‘ படத்திலும் நடித்து வருகிறார். நிதின் உடன் நடித்துள்ள ராங் தே விரைவில் வெளியாக உள்ளது.

Share this story