நாளை பிரமாண்டமாக வெளியாகிறது ‘கே.ஜி.எஃப் 2’ டீசர்…

நாளை பிரமாண்டமாக வெளியாகிறது ‘கே.ஜி.எஃப் 2’ டீசர்…

கேஜிஎப் 2 படத்தின் பிரமாண்ட டீசர் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் யாஷ் நடித்து 2018-ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் வெளியான படம் கேஜிஎப். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். 

நாளை பிரமாண்டமாக வெளியாகிறது ‘கே.ஜி.எஃப் 2’ டீசர்…

எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இந்த படத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் படக்குழு படமாக்கியது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 8 ஆம் தேதி டீசரை ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

நாளை பிரமாண்டமாக வெளியாகிறது ‘கே.ஜி.எஃப் 2’ டீசர்…

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மலையாள திரையரங்க உரிமையை நடிகர் பிருத்விராஜ் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளாராம். இதுகுறித்து அறிவித்துள்ள பிருத்விராஜ் புரொடக்‌ஷன் நிறுவனம் ‘நாங்கள் கே.ஜி.எஃப் படத்தின் மிகப்பெரிய ரசிகர்கள். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றை நான் வழங்குவதற்கான பாக்கியத்தைப் பெறுவதை விட சிறந்த வழி எதுவும் இல்லை. எங்கள் நிறுவனம் இந்த படத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் ராக்கியை காண ஆவலில் இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளது.

Share this story