கோவில்களை பக்தர்களிடம் கொடுங்கள்… சத்குரு கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு !

கோவில்களை பக்தர்களிடம் கொடுங்கள்… சத்குரு கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு !

அழிந்து வரும் ஆயிரக்கணக்கான கோவில்களை பாதுகாக்க, அதை பக்தர்களிடம் கொடுக்கவேண்டும் என்ற சத்குருவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு கொடுத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான தமிழக கோவில்கள் படிபடியாக அழிந்து வருவதால், அவற்றை பாதுகாக்க பக்தர்களிடமே கோவில்களை விட்டுவிடவேண்டும் என அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை சத்குரு வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ் கலாச்சாரத்திற்கு மூலமாக இருப்பது கோவில்தான். நம் மாநிலத்திற்கே கோவிலை தான் அடையாளமாக வைத்துள்ளோம்.

கோவில்களை பக்தர்களிடம் கொடுங்கள்… சத்குரு கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு !

கோவில் என்பது ஆன்மாவை போன்றது. இந்த ஆன்மா அரசாங்கத்தின் கையில் அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பல ஆயிரம் கோவில்களில் பூஜை செய்வது, பராமரிப்பது, பாதுகாப்பது என அனைத்தும் ஒரு நபர் மட்டுமே செய்வதாக கூறப்படுகிறது. ஆகவே கோவில்களை பாதுகாக்க, பக்தர்களிடமே கோவில்களை ஒப்படைக்கவேண்டும் என சத்குரு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சத்குருவின் இந்த கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பல கோவில்கள் ஒரு கால பூஜை கூட செய்வதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் மிக குறைவானவர்களே செய்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share this story