சித்ரா மரணத்தால் கண்ணீர் வடிக்கும் கோலிவுட்!

சித்ரா மரணத்தால் கண்ணீர் வடிக்கும் கோலிவுட்!

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சித்ரா. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு, ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

சித்ரா ஹேம்நாத் உடன் தான் நசரேத்பேட்டையில் உள்ள உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சித்ரா மரணத்தால் கண்ணீர் வடிக்கும் கோலிவுட்!

ஆனால் இன்னும், அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சித்ராவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்தால் மட்டுமே சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்ததா என்று தெரிய வரும்.

இந்நிலையில், சித்ரா மரணம் குறித்து கோலிவுட் பிரபலங்கள் வருத்தத்துடன் பதிவு வெளியிட்டுள்ளனர்.

“நடிகை சித்ராவின் மரணம் குறித்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான கலைஞ இவ்வளவு சீக்கிரம் போய்விட்டார். தற்கொலை என்பது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். ஒரு சமூகமாக, இந்த உண்மையை முன்பை விட வலுவாக வலியுறுத்த வேண்டும்!” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் நிறைந்த வாழ்க்கை மிக விரைவில் பறிபோகிறது. அவர்களை அந்த அளவிற்கு தள்ளுவது எது? அவர் யாரையாவது, அணுக விரும்பினாள். அவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது ,ஆனால் அந்த வலியை உணரமுடிகிறது. நீங்கள் தேடியதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று நம்புகிறேன்” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஓ டியர்… உனக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது. இந்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்று இப்போதும் விரும்புகிறேன்” என்று நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

அன்பே கடவுள் உனக்கு அத்தகைய அழகு, வெற்றிகரமான தொழில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக பல ரசிகர்கள் கொடுத்துள்ளார். நீ உன் சொந்த வீட்டைக் கட்டியிருக்கிறாய். கனிவான பெற்றோர்கள், மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் அல்லவா? உனக்கு வேறு என்ன வேண்டும் ?? உன்னை இப்படி அவசரமாகப் போகச் செய்தது எது? இந்த மரணத்திற்காக பல நாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களா?” என்று நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Share this story