அதர்வா - ராஜ் கிரண் இணைந்து நடிக்கும் ‘பட்டத்து அரசன்’... ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்து முக்கிய அறிவிப்பு !

PattathuAarasan

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘களவாணி’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சற்குணம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கு பிறகு அதர்வாவை வைத்து ‘பட்டத்து அரசன்’ படத்தை இயக்கியுள்ளார். ‘சண்டி வீரன்’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

PattathuAarasan

இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வாவுக்கு ஜோடியா ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. 

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாரோ யாரோ இவ என தொடங்கும் இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

Share this story