மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷின் ‘வாத்தி’... கவலையில் படக்குழுவினர் !
தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு பணிகள் நிறைவுபெறாததால் இந்த படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை. இதையடுத்து வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை முதலில் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக சொல்லப்பட்டது. அதன்பிறகு சமீபத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் திட்டமிட்டபடி வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் திட்டமிட்டபடி ‘வாத்தி‘ வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.