‘நித்தம் ஒரு வானம்’ சூப்பர் ஹிட் வெற்றி... அசோக் செல்வனை வாழ்த்திய மணிரத்னம் !

nitham oru vanam

‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் மணிரத்னத்திடம் அசோக் செல்வன் வாழ்த்துபெற்றுள்ளார். 

நடிகர் அசோக் செல்வன் முதல்முறையாக நான்கு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, பிரபல தெலுங்கு நடிகை ஷிவாத்மிகா, ஷிவதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

nitham oru vanam

 தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை வியகாம் 18 ஸ்டுடியோ தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். நான்கு பெண்களுடன் பயணம் செய்யும் ஒரு ஹீரோவின் கதைத்தான் இந்த படம்.

nitham oru vanam

இந்நிலையில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து அசோக் செல்வன் மற்றும் இயக்குனர் கார்த்திக் வாழ்த்து பெற்றனர். தற்போது இந்த சந்திப்பின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Share this story