விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் புகார்

விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் புகார்

 கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல படத்தின் மூலம் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் கண்டார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தனுஷூடன் இணைந்து நடித்து வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. 

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் மாளவிகா மோகனன். இந்நிலையில், ஜெய்ப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம செய்தபோது, ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோனனன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இண்டிகோ விமானத்தில் பணியாளர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், அதன் சேவையும் மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
 

Share this story