மே மாதத்திற்குள் தயாராகும் ‘தளபதி 67’.. லோகேஷ் கனகராஜின் புதிய திட்டம் !

thalapthy 67

'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை நடிகர் மனோபாலா கொடுத்துள்ளார். 

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது. 'மாஸ்டர்' படத்தின்  வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். 

thalapthy 67

மேலும் கதாநாயகியாக திரிஷாவும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் சென்னையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் காப்பி வரும் மே இறுதியிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

 

Share this story