முடிவுதான் இதன் ஆரம்பம்-மீண்டும் இணையும் த்ரில்லர் பாய்ஸ்!

முடிவுதான் இதன் ஆரம்பம்-மீண்டும் இணையும் த்ரில்லர் பாய்ஸ்!

மலையாளத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் வெளியான அஞ்சாம் பதிரா திரைப்படம் அங்கு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சீட் நுனியில் உட்கார வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக அப்படம் உருவாகி இருந்தது. தமிழுக்கு எப்படி ராட்சசன் அமைந்ததோ அதே போல் மலையாளத்திற்கு அஞ்சாமல் பதிரா அமைந்தது.

இந்தப் படத்தை நிதின் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியிருந்தார். ஆஷிக் உஸ்மான் தயாரித்திருந்தார்.

முடிவுதான் இதன் ஆரம்பம்-மீண்டும் இணையும் த்ரில்லர் பாய்ஸ்!

தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளனர். இதுகுறித்து பதிவிட்டிருந்த குஞ்சக்கோ போபன் த்ரில்லர் பாய்ஸ் மீண்டும் இணையப் போகிறோம். மற்றொரு விறுவிறுப்பான பயணத்திற்குத் தயாராகிவிட்டோம். ஒருவேளை முடிவுதான் இதன் ஆரம்பமாக கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

முடிவுதான் இதன் ஆரம்பம்-மீண்டும் இணையும் த்ரில்லர் பாய்ஸ்!

எனவே படம் அஞ்சாம் பதிரா படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்று மலையாள சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

நேற்று முன்தினம் குஞ்சாக்கோ போபன் நடித்து வந்த நிழல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தனர். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

Share this story