நிழல்- நயன்தாரா நடிக்கும் மலையாள திரில்லர் படம்!

நிழல்- நயன்தாரா நடிக்கும் மலையாள திரில்லர் படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாளத்தில் அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை கேரளா அரசின் மாநில விருது வென்ற எடிட்டர் என் பட்டாதிரி இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு நிழல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

நிழல்- நயன்தாரா நடிக்கும் மலையாள திரில்லர் படம்!

இப்படம் திரில்லர் ஜேர்னரில் உருவாக இருக்கிறது. குஞ்சக்கோ போபன் இதற்கு முன்னர் நடித்திருந்த அஞ்சாம் பதிரா இதுவரை மலையாளத்தில் வெளியான கிரைம் திரில்லர்களில் முக்கியமானது என்று சொல்லலாம்.

குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்பு ட்வெண்டி -20 படத்தில் ஒரு பாடலில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது ட்வெண்டி 20(2020) ஆண்டில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளோம் என்று குஞ்சக்கோ தெரிவித்துள்ளார்.

நிழல்- நயன்தாரா நடிக்கும் மலையாள திரில்லர் படம்!

“இது தொற்றுநோய் காலத்தைக் கொண்ட படம் அல்ல. ஆனால் கட்டுப்பாடுகள் உள்ள இடங்களில் இதை படமாக்கி விடலாம். படத்தில் சில நடிகர்களே உள்ளனர். எனவே நாங்கள் அரசு கட்டுப்பாடுகளின் கீழ் இப்படத்தை உருவாக்க முடியும். இப்படத்தின் பெரும்பகுதி எர்ணாகுளத்தில் படமாக்கப்பட இருக்கிறது.” என்று குஞ்சக்கோ தெரிவித்துள்ளார்.

Share this story