கொரோனா பரிசோதனை முடிவை வெளியிட்ட குஷ்பு!

கொரோனா பரிசோதனை முடிவை வெளியிட்ட குஷ்பு!

தன்னுடைய உடல்நிலை ஆரோக்கிய ரகசியத்தை நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

90-களில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் குஷ்பு. தற்போது படங்கள் நடிப்பதிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நாட்டு நடப்பு மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார்.

Image

அரசியல் மட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது தான் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து பயணத்திலும், கூட்டங்களிலும் கலந்து வருவதால் நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 வது முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். மறுபடியும் கொரோனா பாதிப்பில்லை. உங்கள் நல்லெண்ணத்திற்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி.” என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவை மேற்கோள்கட்டி பதிவிட்ட நடிகை கஸ்தூரி “இரும்புப் பெண், உங்கள் உடல் சக்திக்கான ரகசியம் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த குஷ்பு “முகக்கவசம் கட்டாயமாக அணியுங்கள், கைகளை நன்றாக கழுவுங்கள், சானிட்டீசரைப் பயன்படுத்துங்கள். எல்லா நேரத்திலும் சமூக இடைவெளியை பராமரிக்க முடியாது, ஆனால் உங்களால் முடிந்தவரை அதைச் செய்ய முயற்சிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story