ரெய்டில் சிக்கிய கஞ்சா… கணவருடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை!

ரெய்டில் சிக்கிய கஞ்சா… கணவருடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை!

சுஷாந்த் வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் போதைப்பொருள் விசாரணையில் பிரபல பாலிவுட் பெண் காமெடியன் பார்தி சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியவை உலுக்கிய நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐ விசாரணையில் தற்போது போதைப் பொருள் கோணத்திற்குடீ திரும்பியுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

ரெய்டில் சிக்கிய கஞ்சா… கணவருடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை!

இந்த வழக்கில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி, தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் என பல பிரபலங்களின் பெயர் சிக்கியுள்ளத்து. இவர்கள் அனைவரும் என்.சி.பி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகினர்.

ரெய்டில் சிக்கிய கஞ்சா… கணவருடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை!

தற்போது பிரபல நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான பார்தி சிங் மற்றும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவின் வீடு மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் நேற்று சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் வீட்டில் சிறிய அளவு கஞ்சாவை என்சிபி கண்டுபிடித்துள்ளனர்.

அதையடுத்து என்சிபி விசாரணைக்குப் பின்னர் பாரதி சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவும் என்சிபி அலுவலத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Share this story