ராஜமௌலியின் பிரம்மாண்டப் படத்தை கைப்பற்றிய லைகா… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

ராஜமௌலியின் பிரம்மாண்டப் படத்தை கைப்பற்றிய லைகா… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

ராஜமௌலியின் பிரம்மாண்டப் படைப்பான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலியை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் ஆகிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

ராஜமௌலியின் பிரம்மாண்டப் படத்தை கைப்பற்றிய லைகா… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

ராமராஜுவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஆக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பாட், சமுத்திரகனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இப்படத்தை DVV Entertainment நிறுவனம் தயாரிக்கின்றனர்.

தற்போது லைகா நிறுவனம் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ராஜமௌலியின் பிரம்மாண்டப் படத்தை கைப்பற்றிய லைகா… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

அந்த முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லைகா புரொடக்ஷன்ஸ்
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கான தமிழக தியேட்டர் உரிமைகளைப் பெற்றுள்ளது … பிரம்மாண்ட படத்திற்கான பிரம்மாண்ட எதிர்ப்பார்ப்பை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் அக்டோபர் மாதம் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Share this story