ஆயிரத்தில் ஒருவரா சிம்பு? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் மாநாடு போஸ்டர் !

ஆயிரத்தில் ஒருவரா சிம்பு? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் மாநாடு போஸ்டர் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இப்படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஒருவரா சிம்பு? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் மாநாடு போஸ்டர் !

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது மாநாடு படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகர் சிம்பு இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவரா சிம்பு? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் மாநாடு போஸ்டர் !

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியான நிலையில் புதிய ஒரு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
முதலில் வெளியான போஸ்டரில் தொழுகை கோலத்தில் இருக்கும் சிம்புவின் நெற்றியில் புல்லட் பாய்ந்தது போலவும், முகத்தில் ரத்தம் வழிவது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது .

இதனை தொடர்ந்து தற்போது வெளியான போஸ்டரில் சிம்பு தன்னை தானே சுட்டுக்கொள்வதை போன்று துப்பாக்கியை ஏந்தியுள்ளார். மேலும் இந்த போஸ்டரில் “சரியான விஷயத்திற்காக நில்லு அது தனியாக நின்றாலும் சரி” என்ற பொன்மொழி இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்ட்டரை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம்.. நான் அவதரிப்பேன்.. என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதுஇந்த புதிய போஸ்டர் சிம்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Share this story