பொன்னியின் செல்வன் படத்தால் விக்ரம் மீது கடுப்பான மணிரத்னம்!?

பொன்னியின் செல்வன் படத்தால் விக்ரம் மீது கடுப்பான மணிரத்னம்!?

பொன்னியின் செல்வன் படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் விக்ரம் மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வருகிறார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கார்த்தி இந்தப் படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்ரம் இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடையானது. தற்போது வரை 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தால் விக்ரம் மீது கடுப்பான மணிரத்னம்!?

விக்ரம் தற்போது சீயான் 60 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது கோப்ரா படத்தின் தேதிகளை வைத்து தான் இந்தப் படத்திற்கு தேதிகள் ஒதுக்கினாராம். இதனால் சொன்ன தேதியில் பொன்னியின் செல்வன் படத்தில் கலந்துகொள்ளவில்லையாம்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் பட வேலைகள் அப்படியே காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் படத்தால் விக்ரம் மீது கடுப்பான மணிரத்னம்!?

இதுவரை எடுத்த முடித்த காட்சிகளைப் பார்த்ததும், மணிரத்னம் விக்ரம் மீது கோபடமடைந்துள்ளாராம். பொன்னியின் செல்வன் படத்திற்கு விக்ரம் தேதிகள் கொஞ்சம் அனுசரித்து கொடுத்திருந்தால் படத்தின் முதல் பாகத்தை முடித்து வெளியிட்டிருக்கலாம். ஆனால் தற்போது படம் அடுத்த கட்டத்திற்குப் போகாமல் தேங்கி நிற்பதால் மணிரத்னம் விக்ரம் மீது கோபமாகியிருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story