இந்த நெருக்கடியான நேரத்திலும் அடுத்த படத்தின் பணியை தொடங்கிவிட்டேன் – மாரி செல்வராஜ்…

இந்த நெருக்கடியான நேரத்திலும் அடுத்த படத்தின் பணியை தொடங்கிவிட்டேன் – மாரி செல்வராஜ்…

அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை தொடங்கிவிட்டதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்திலும் அடுத்த படத்தின் பணியை தொடங்கிவிட்டேன் – மாரி செல்வராஜ்…

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்‌ மாரி செல்வராஜ். இருவேறு சமூகங்களிடையே தெய்வத்தை வழிபாடு நடத்துவதில் உள்ள வேறுபாட்டை வைத்து எடுக்கப்பட்ட படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் நடிகர்‌‌ கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் பெரும் வெற்றி பெற்றது.

இந்த நெருக்கடியான நேரத்திலும் அடுத்த படத்தின் பணியை தொடங்கிவிட்டேன் – மாரி செல்வராஜ்…

இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ‘கர்ணன்’ படத்தை ‌இயக்கியுள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியலை தத்ரூபமாக இந்த படத்தின் மூலம் எடுத்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் பல தடைகளை தாண்டி நாளை வெளியாக உள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்திலும் அடுத்த படத்தின் பணியை தொடங்கிவிட்டேன் – மாரி செல்வராஜ்…

இந்த படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின்‌ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை தொடங்கிவிட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ‘கர்ணன்’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என ‌கூறப்படுகிறது.

Share this story