3 நாளில் 100கோடி வசூல் – தெறிக்கவிடும் ‘மாஸ்டர்’…
3நாளில் 100கோடி ரூபாய் வசூலித்து விஜய்யின் மாஸ்டர் படம் சாதனை படைத்துள்ளது.
விஜய் வித்தியாசமான தோன்றியுள்ள படம் ‘மாஸ்டர்’. லோககேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டுள்ளது. விஜய் நடிக்கும் காட்சிகள் செதுக்கி உள்ளார் இயக்குனர் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். விஜய்யை திரையில் காண 1வருடம் காத்திருந்தோம். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது என்று ஏகத்தும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இப்படி மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றாலும், வணிக ரீதியாக ஜெயித்ததா என கேள்வி எழுந்தது. பெரும்பாலும் பெரிய நடிகர்கள் படங்கள் வசூலில் சாதனை படைக்கும். ஆனால் முன்பு ஓடிய படங்களெல்லாம் 100 சதவீத இருக்கைகளுடன் இருந்தன.
தற்போது கொரானா காலம் என்பதால் 50சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விஜய் மாஸ்டர் படம் வசூல் சாதனை படைக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதையெல்லாம் தாண்டி மாஸ்டர் படம் வசூல் சாதனை படைத்துள்ளது. கடந்த 3 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும், படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் 55கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 10கோடியும், கேரளாவில் 5கோடியும், கர்நாடகா, வட இந்தியா மற்று வெளிநாடுகளில் 30கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் வசூல் மட்டும் 25கோடி ரூபாய் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.