மாயாண்டி குடும்பத்தார் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!?

மாயாண்டி குடும்பத்தார் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!?

நடிகர் கௌதம் கார்த்திக், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

2009-ம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்றது. மணிவண்ணன், தருண் கோபி, பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, சீமான், கே.பி ஜெகன், ரவிமரியா, சிங்கம்புலி என இயக்குனர் பட்டாளமே நடிகர்களாக இந்தப் படத்தில் ஒன்றிணைந்தனர். இப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது.

மாயாண்டி குடும்பத்தார் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!?

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் கவுதம் கார்த்திக் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராசுமதுரவன் மறைந்துவிட்டதால் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த நந்தா பெரியசாமி இந்த இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாயாண்டி குடும்பத்தார் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!?

கவுதம் கார்த்திக் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது எழில் இயக்கத்தில் பார்த்திபன் உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Share this story