வடிவேலுவுக்கு வாய்ப்பு தர நான் தயார்… மீரா மிதுன்!

வடிவேலுவுக்கு வாய்ப்பு தர நான் தயார்… மீரா மிதுன்!

மாடல் மீரா மிதுன் தான் தயாரிக்கும் படத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் காமெடி என்னும் களத்தில் நீண்ட காலத்திற்கு முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காமெடி நடிகர்களில் வடிவேலு மிக முக்கியமானவர். இவரது காமெடியை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது என்றே சொல்லலாம்.

வடிவேலுவுக்கு வாய்ப்பு தர நான் தயார்… மீரா மிதுன்!
Vadivelu at Kaththi Sandai Trailer & HD Songs Launch

இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த வடிவேலு திடீரென காணாமல் போய்விட்டார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க, தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் வடிவேல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வடிவேலு, கொரானாவால் நீங்க ஒரு வருடமாகதான் லாக்டவுன்ல இருக்கீங்க. ஆனா நான் பத்து வருஷமா லாக்டவுனிலேயே இருக்கிறேன் என்றவாறு பேசினார். மேலும் ‘வஞ்சத்தில் வீழ்ந்தேனடா’ என்ற கண்ணீர் தழுதழுத்த குரலில் பாடினார். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

தற்போது மாடல் மீரா மிதுன் வடிவேலுவுக்கு தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடானு வருத்தப்பட்டீங்க. எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். நீங்கள் மிகப்பெரிய நடிகர், உங்களின் தெனாலி ராமன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் தயாரிக்கும் படங்களில் நீங்கள் நடிக்க வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.  

Share this story