சிம்பு குரலில் உருக வைக்கும் மெலடி பாடல்!

சிம்பு குரலில் உருக வைக்கும் மெலடி பாடல்!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பட சுல்தான் படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்தப் படத்தின் இரண்டாம் பாடலான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல‘ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சிம்பு குரலில் உருக வைக்கும் மெலடி பாடல்!

சிம்பு பாடலில் உருகவைக்கும் மெலோடி பாடலாக உருவாகியுள்ளது. படத்திலிருந்து சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ரஷ்மிகா தமிழ்ப் பெண்ணாகப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார்.

சுல்தான் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். சுல்தான் வரும் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Share this story