என் கணவர் மீது வெறுப்பு இருந்தது – ரகசியத்தை உடைத்த மோகன் லாலின் மனைவி…

என் கணவர் மீது வெறுப்பு இருந்தது – ரகசியத்தை உடைத்த மோகன் லாலின் மனைவி…

மோகன் லால் நடித்த சில படங்கள் எனக்கு பிடிக்காததால், அவர் எனக்கு வெறுப்பு இருந்தது என அவரின் மனைவி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

என் கணவர் மீது வெறுப்பு இருந்தது – ரகசியத்தை உடைத்த மோகன் லாலின் மனைவி…

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கும் மோகன்லால் தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார். ‘ப்ரோஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். இந்த படத்தில் பிரிதிவிராஜ், பிரதாப், பாஸ் வேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். குழந்தைகளுக்கான மாயாஜாலப் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

என் கணவர் மீது வெறுப்பு இருந்தது – ரகசியத்தை உடைத்த மோகன் லாலின் மனைவி…

3 டி தொழில்நுட்பத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை மோகன் லால் எடுக்கவுள்ளார். போர்ச்சுகல், இந்தியா, ஆப்பிரிக்காவில் நடப்பது போன்ற பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் மம்முட்டி, ப்ருத்விராஜ், பிரியதர்ஷன் என மலையாள திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

என் கணவர் மீது வெறுப்பு இருந்தது – ரகசியத்தை உடைத்த மோகன் லாலின் மனைவி…

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய மோகன் லாலின் மனைவி சுசித்ரா, என் கணவர் நடித்த முதல் படமான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தை எனக்கு பிடிக்காது. ஏனெனில் அதில் அவர் ரவுடியாக நடித்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து வந்தார். இதனால் அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

என் கணவர் மீது வெறுப்பு இருந்தது – ரகசியத்தை உடைத்த மோகன் லாலின் மனைவி…

பின்னர் ‘என்டே மம்மட்டிகுட்டியம்மாக்கு’ படத்திற்கு பின் அவரை பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டோம். என் கணவர் எப்போதும் எனது பேவரிட் ஹீரோவாக உள்ளார். இதையடுத்து அவர் இயக்குனராக மாறுவதால் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

Share this story