சிரஞ்சீவி படத்தில் இணைந்த ‘தனி ஒருவன்’ இயக்குனர்!?

சிரஞ்சீவி படத்தில் இணைந்த ‘தனி ஒருவன்’ இயக்குனர்!?

சிரஞ்சீவி நடிக்கும் ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன் ராஜா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்த ப்ரித்விராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வாரி குவித்தது. முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார் பிரித்விராஜ்.

சிரஞ்சீவி படத்தில் இணைந்த ‘தனி ஒருவன்’ இயக்குனர்!?

தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. அப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்படத்திற்கான இயக்குனர் தேர்வில் பல குளறுபடிகள் நடந்து வருகிறது. முதலில் சுஜித் என்பவர் இப்படத்தை இயக்கவிருந்தார். அதையடுத்து சிரஞ்சீவியின் ‘கைதி 150’ படத்தை எடுத்த விவி விநாயக் என்பவர் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தனி ஒருவன் படத்தால் இந்தியாவையேத் திரும்பிப் பார்க்க வைத்தவர் மோகன் ராஜா.எனவே அவர் இப்படத்தை இயக்க சரியாக இருப்பார் என ராம் சரணும், சிரஞ்சீவியும் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story