‘ப்ரோஸ்’ 3டி படத்தில் நடிகர் அஜீத் நடிப்பதாக வந்த செய்தி… உண்மையை சொன்ன மோகன்லால்…

‘ப்ரோஸ்’ 3டி படத்தில் நடிகர் அஜீத் நடிப்பதாக வந்த செய்தி… உண்மையை  சொன்ன மோகன்லால்…

‘ப்ரோஸ்’ 3டி படத்தில் நடிகர் அஜீத் நடிப்பதாக வந்த செய்திக்கு நடிகர் மோகன்லால் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘ப்ரோஸ்’ 3டி படத்தில் நடிகர் அஜீத் நடிப்பதாக வந்த செய்தி… உண்மையை  சொன்ன மோகன்லால்…

நடிகர் அஜீத் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டபோதிலும், இன்னும் 7 முதல் 9 நாட்கள் ‌வரை ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது.இதற்காக ஸ்பெயின் செல்ல படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், அந்நாட்டின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த படத்தின் டீசர் உள்ளிட்டவை எப்போது வரும் என ரசிகர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ம் தேதி வெளியாகிறது.

‘ப்ரோஸ்’ 3டி படத்தில் நடிகர் அஜீத் நடிப்பதாக வந்த செய்தி… உண்மையை  சொன்ன மோகன்லால்…

‘நேர்கொண்ட பார்வை’ இயக்குனர் எச்.வினோத் இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தில் சுமித்ரா, ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘ப்ரோஸ்’ 3டி படத்தில் நடிகர் அஜீத் நடிப்பதாக வந்த செய்தி… உண்மையை  சொன்ன மோகன்லால்…

வலிமை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜீன் அல்லது ஜூலை மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் பெற்றுள்ளார். இந்நிலையில் மோகன்லால் மலையாளத்தில் முதல்முறையாக இயக்கி வரும் ப்ரோஸ் 3டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி வந்தது. இதையடுத்து இந்த தகவல் வெறும் வதந்தி என ப்ரோஸ் படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Share this story