அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால்!

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மேலும் பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்தப் படங்களும் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் கமல் ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது. தமிழ் ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கிஇருந்தார்.

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால்!

’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. மோகன்லால் & மீனா நடிக்கும் இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். படக்குழுவினர் அனைவரும் கடந்த 15 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால்!

தற்போது மோகன்லால் த்ரிஷ்யம் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தள புகைப்படத்தை வெளியிட்ட அவர் “கொரோனாவிற்காக அமைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைப்பிடித்த பிறகு த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பில் இணைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழிலும் பாபநாசம் படத்தின் உருவாகுமா? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Share this story