சிங்கத்தின் முன் கம்பீரமாக நிற்கும் புலிமுருகன்!

சிங்கத்தின் முன் கம்பீரமாக நிற்கும் புலிமுருகன்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது பாலக்காட்டில் ‘ஆரட்டு’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது மோகன்லால் தனது துபாய் பயணத்திலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கம்பீரமான சிங்கத்தின் முன் மிரட்டும்புலி போல் அமர்ந்துள்ளார்.

சிங்கத்தின் முன் கம்பீரமாக நிற்கும் புலிமுருகன்!

மோகன்லால் சமீபத்தில் தான் த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்து முடித்தார். ‘த்ரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசெப் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பை முடித்த மோகன்லால் துபாய் பயணம் சென்றார். அங்கு ஐ.பி.எல் பார்த்தது முதல் சஞ்சய் தத் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியது வரை அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களில் வைரலாகியது.

aarattu

நவம்பர் 23 ஆம் தேதி பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘அராட்டு’ படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் இணைந்தார். தற்போது பாலக்காட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன்லால் நெய்யட்டிங்கர கோபன் என்ற பெயரில் இப்படத்தில் நடிக்கிறார்.

Share this story