சசிகுமாரை முந்தானையில் முடிந்துகொள்வாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

சசிகுமாரை முந்தானையில் முடிந்துகொள்வாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் சசிகுமார் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கே.பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான படம் ‘முந்தானை முடிச்சு’. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், பாக்யராஜ் ஜோடியாக ஊர்வசி நடித்தார். பூர்ணிமா பாக்யராஜ், தீபா, ‘பசி’ சத்யா, கோவை சரளா உள்ளிட்ட
பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சசிகுமாரை முந்தானையில் முடிந்துகொள்வாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்த இந்தப் படத்துக்கு, அசோக் குமார் ஒளிப்பதிவு செய்தார். இப்போது பார்த்தாலும் ரசிக்கும் வகையில்
இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

சசிகுமாரை முந்தானையில் முடிந்துகொள்வாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

இந்நிலையில், 37 வருடங்களுக்குப் பிறகு ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் செய்யப்படுகிறது. இதன் கதை, திரைக்கதை, வசனத்தை கே.பாக்யராஜ் எழுதியுள்ளார். ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க ஐஸ்வர்யா
ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமாரை முந்தானையில் முடிந்துகொள்வாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

இயக்குநர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தை, ஜேஎஸ்பி நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Share this story