மீண்டும் சின்னத்திரையில் ‘நாயகி’… இல்லத்தரசிகள் வரவேற்பு !

மீண்டும் சின்னத்திரையில் ‘நாயகி’… இல்லத்தரசிகள் வரவேற்பு !

ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலான நாயகி சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.

மீண்டும் சின்னத்திரையில் ‘நாயகி’… இல்லத்தரசிகள் வரவேற்பு !

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் நாயகி‌யும் ஒன்று. இந்த சீரியலில் ஆனந்தி கேரக்டரில் நடித்து வந்த வித்யாவுக்கு பிரதீப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த சீரியல் முதன்முதலாக ஒளிப்பரப்பப்பட்ட போது நாயகியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பின்னர் அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வித்யா பிரதீப் இந்த சீரியலுக்குள் நுழைந்தார். அவர் வந்த பிறகு சீரியலின் விறுவிறு வேற லெவலுக்கு சென்றது.மேலும் நடிகை அம்பிகா, பாப்ரி கோஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மீண்டும் சின்னத்திரையில் ‘நாயகி’… இல்லத்தரசிகள் வரவேற்பு !

இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. பல அதிரடி கிளைமேக்ஸ்களுடன் முதல் சீசன் முடிவடைந்ததையடுத்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது.அதில் நடிகை நக்‌ஷத்ரா, கிருஷ்ணா, அம்பிகா, பாப்ரி கோஷ் ஆகியோர் நடித்து வந்தனர். கதை விறுவிறுப்பாக சென்றது. ஆனால் நீண்ட நாட்கள் ஒளிப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த சீரியல் கொரானா உள்ளிட்ட பல காரணங்களால் சீக்கிரமாகவே முடிக்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீண்டும் சின்னத்திரையில் ‘நாயகி’… இல்லத்தரசிகள் வரவேற்பு !

இந்நிலையில் இந்த சீரியலின் முதல் சீசன் மீண்டும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.இதற்கான ப்ரோமோவையும் கலைஞர் டிவி வெளியிட்டு வருகிறது.

Share this story