நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒன்றிணைந்து வெளியிட்ட புதிய செய்தி !

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒன்றிணைந்து வெளியிட்ட புதிய செய்தி !

காதல் ஜோடிகளான இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஒன்றிணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் மூலம் கூழாங்கல் என்ற புதிய படத்தை தயாரிக்கின்றனர்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் திரைப்படம் நெற்றிக்கண் . இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒன்றிணைந்து வெளியிட்ட புதிய செய்தி !

தற்போது விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இயக்கத்திலும் ,நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் பி.எஸ்.வினோத்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் கூழாங்கல் என்ற படத்தை ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கின்றனர்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒன்றிணைந்து வெளியிட்ட புதிய செய்தி !

இதுகுறித்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மிக அரிதான ஒரு நாள் தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த ‘கூழாங்கல்’ எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது.

‘கூழாங்கல்’ பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.

உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் ” என தெரிவித்துள்ளனர்.

Share this story