செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் ஆக மீண்டும் இடைக்காலத் தடை!

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் ஆக மீண்டும் இடைக்காலத் தடை!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாக மீண்டும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை‘ படம் உருவாகி பல ஆண்டுகள் ஆன பின்னும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. செல்வராகவன் ரசிகர்களும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் ஆக மீண்டும் இடைக்காலத் தடை!

அதையடுத்து இப்படம் வரும் 5-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்தனர். இது செல்வராகவன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

தற்போது மீண்டும் இப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தான் இப்படத்தை வெளியிடத் தடை செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் ஆக மீண்டும் இடைக்காலத் தடை!

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கினர். பின்னர் படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1.75 கோடி ரூபாய் கடனை செலுத்திவிட்டனர். மீதமுள்ள 1.24 கோடி ரூபாயைத் தற்போது வரை கொடுக்கவில்லை. நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்திருப்பதால் படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நெஞ்சம் மறப்பதில்லை வெளியாக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Share this story