புதிய சிந்தனை கொண்ட இயக்குனர்களை வரவேற்கிறேன் – சேரன்

புதிய சிந்தனை கொண்ட இயக்குனர்களை வரவேற்கிறேன் – சேரன்

புதிய சிந்தனையுள்ள இயக்குனர்களை வரவேற்கிறேன் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனராக தமிழ் சினிமா வலம் வருபவர் இயக்குனர் சேரன். தற்போது படங்களில் நடித்து சிறப்பான பணியாற்றி வருகிறார். பன்முக திறமைக் கொண்ட இவர் ‘ஆட்டோகிராப்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானார்.

புதிய சிந்தனை கொண்ட இயக்குனர்களை வரவேற்கிறேன் – சேரன்

தற்போது கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சேரன். நந்தா பெரியசாமி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டு சேரன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார் சேரன். அதில், உலகிலேயே எனக்கு கிடைத்த சந்தோசங்களில் முக்கியமானதும் முதன்மையானதும் நான் இயக்குனரானதுதான்மா… நான் என் கடைசி காலங்கள் வரை திரைப்படங்கள் இயக்கிக்கொண்டே இருக்க நினைக்கிறேன்.. வளரும் சமூகத்தில் இருந்து புதிய சிந்தனையுள்ள இயக்குனர்கள் வருவதை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share this story