‘இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல’ ‘அண்ணாத்த’ அப்டேட்..!?

‘இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல’ ‘அண்ணாத்த’ அப்டேட்..!?

ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பின் போது உடன் பணியாற்றிய ஆட்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மொத்த யூனிட்டும் சென்னைக்கு திரும்பியதும் அதைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கியதும்தான் இப்போ வரை டாக் ஆப் தி டவுணா இருக்கு.

‘இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல’ ‘அண்ணாத்த’ அப்டேட்..!?

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படம் ட்ராப் ஆகப் போகுது என்று ஒரு குரூப் கிளப்பிவிட்டது.இல்லை ஹைதராபாத் போகலை, சென்னையில் செட்டுப்போட்டு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கப்போகிறார்கள். அதுவும் இப்போ கிடையாது, எலெக்சன்லாம் முடிந்த பிறகுதான் வருவேன் என்று ரஜினி சொல்லிவிட்டதாகவும் ஒரு செய்தி இரண்டு நாளாக ஓடிக்கொண்டிருக்கிறது! உண்மை நிலவரம் என்ன தெரியுமா..?

‘இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல’ ‘அண்ணாத்த’ அப்டேட்..!?

சென்னை ஈவிபி யில் செட் ஒர்க் ஆரம்பித்தது என்னவோ உண்மை… ஆனால், அதை இப்போது நிறுத்திவிட்டார்கள். மீண்டும் ஹைதராபாத்துக்கு தான் போகப் போகிறார்கள். பொங்கல் முடிந்து படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. ரஜினி அல்லாத போர்சன்கள் மட்டும் இப்போது எடுக்கவிருக்கிறார்கள். இதற்கு நடுவே உடல் நிலை சரியாக இருந்தால் வந்து தனது போர்சனை முடித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

‘இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல’ ‘அண்ணாத்த’ அப்டேட்..!?

சென்னையில் பண்ணலாம் அது ரஜினிக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்துதான் செலவு பண்ணி ஹதராபாத்தில் போட்ட செட்டை வேண்டாம் என்று இங்கு ஆரம்பித்தார்கள். ரஜினிக்கு மட்டும் 15 நாள் படப்பிடிப்பு இருக்கிறதாம். அந்த நாட்களில் நேற்று வள்ளுவர் கூட்டத்துக்கு ரசிகர்கள் திரண்டு வந்த மாதிரி ஈவிபி ஸ்டுடியோவுக்குள் வந்து விட்டால் ரஜினியின் நிலமை தர்ம சங்கடமாகிவிடும். அதுபோல் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஹைதராபாத்தை டிக் அடிச்சிருக்கிறார் ரஜினி. தவிர, சிகிச்சைக்காக அமெரிக்கா போவதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. படம் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு போனால்,எலெக்சன் முடியும் வரை அமெரிக்காவில் இருப்பது என்றும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்கிறது போயஸ் கார்டன் சோர்ஸ்.

Share this story