எங்களுக்குள்ள இருந்தது முடிஞ்சது, இனி அதப் பத்தி பேசாதீங்க… ஓவியா ஆவேசம்!

எங்களுக்குள்ள இருந்தது முடிஞ்சது, இனி அதப் பத்தி பேசாதீங்க… ஓவியா ஆவேசம்!

நடிகை ஓவியா ஆரவ் திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசன் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளர் என்றால் ஓவியாதான். ஓவியா மீது அதிக பற்று கொண்ட ரசிகர்கள் ‘ஓவியா ஆர்மி’ என்று தனியே ஒரு ஆர்மிவையே உருவாக்கினார்கள். ஆரவ்- பிக்பாஸ் இடையே இருந்த உறவு அந்த சீசன் முழுவதும் மிகப் பிரபலம். மருத்துவ முத்தம் கொடுத்து ஓவியாவின் மன அழுத்தங்களைப் போக்கினார் ஆரவ். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகும் இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள்.

எங்களுக்குள்ள இருந்தது முடிஞ்சது, இனி அதப் பத்தி பேசாதீங்க… ஓவியா ஆவேசம்!

அதையடுத்து ஆரவ்- ராஹி திருமண செய்தி ஓவியா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்த ராஹியை கடந்த செப்டம்பர் 6-ம் தேதி ஆரவ் திருமணம் செய்தார். இவர்கள் திருமணத்தில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஓவியா இவர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அதையடுத்து ஓவியா- ஆரவ் குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

Image

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளித்து வந்தார். அப்போது, ஆரவ் திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓவியா, “ஆரவ்வின் திருமணத்தில் எனக்கு மகிழ்ச்சி தான். அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான், திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கள் இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. இப்போது அவருக்கென ஒரு அழகான வாழ்க்கை அமைந்திருக்கிறது. இனி மீண்டும் அதைப்பற்றி கேட்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Share this story