இளவரசியாக நடிக்கும் ‘மல்லிகா ஷெராவத்’… தமிழில் உருவாகும் பிரம்மாண்ட வரலாற்று படம்…

இளவரசியாக நடிக்கும் ‘மல்லிகா ஷெராவத்’… தமிழில் உருவாகும் பிரம்மாண்ட வரலாற்று படம்…

தமிழில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று படத்தில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கிறார்.

இளவரசியாக நடிக்கும் ‘மல்லிகா ஷெராவத்’… தமிழில் உருவாகும் பிரம்மாண்ட வரலாற்று படம்…

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ஜீவன். வித்தியாசமான நடிப்பால் புகழடைந்த இவருக்கு திரையுலகில் தனி இடமே இருந்தது. நீண்ட நாட்கள் நடிப்புக்கு விடுப்பு எடுத்திருந்த இவர், புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘பாம்பாட்டம்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் என இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். வரலாற்று படம் என்பதால் ஏராளமான திரைநட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இளவரசியாக நடிக்கும் ‘மல்லிகா ஷெராவத்’… தமிழில் உருவாகும் பிரம்மாண்ட வரலாற்று படம்…

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் தயாரிக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கதைக்களத்தை வைத்து இந்த வரலாற்று படம் உருவாகிறது. ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது

இளவரசியாக நடிக்கும் ‘மல்லிகா ஷெராவத்’… தமிழில் உருவாகும் பிரம்மாண்ட வரலாற்று படம்…

இந்நிலையில் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் நாகமதி இளவரசியாக பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகளை படமாக்குவதற்காக பிரம்மாண்ட செட்டுகளை அமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மல்லிகா ஷெராவத் வைத்து சில காட்சிகளை படமாக்க 500 குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. வரலாற்று படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story